T N T C W U
தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் -தூத்துக்குடி மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது

v

v
v

Saturday 13 October 2018

தூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கைகளை வழியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்








தூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கைகளை வழியுறுத்தி 
ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


TNTCWU மாநில சங்கத்தின் 6வது மாநில மாநாட்டின் முடிவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11.10.2018 அன்று மதியம் 01.00 மணி அளவில் GM அலுவலகம் முன்பு BSNLEU & TNTCWU சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு TNTCWU சங்க மாவட்டத் தலைவர் தோழர் C.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்ட நிகழ்வில் BSNL ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் S.பால்ராஜ் பட்டுகுமார் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். TNTCWU சங்க மாவட்டச் செயலர் தோழர் E.ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்ட உரை நிழ்த்தினார். மற்றும் தோழர் S.தளவாய் பாண்டியன் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பரித்து கோஷங்கள் எழுப்பப்பபட்டது.  முடிவில் TNTCWU சங்கத்தின் GM (O) கிளைத் தலைவர் K.ஹரிராமசந்திரன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

                                                    இவண்

                                            மாவட்டச் செயலர்கள்
                                                BSNLEU & TNTCWU
                                                  தூத்துக்குடி.

No comments:

Post a Comment